சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான போலீஸ் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் காவல் அதிகாரிகளை கவுரவிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுக்கு இரண்டு முறை ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான பதக்கம் வழங்கப்படுவது வழக்கம்.