மபி. தெருவில் சுற்றிய முதலை

போபால்: மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் ஆறு, குளங்களின் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இந்நிலையில், சிவபுரி மாவட்டத்தில் உள்ள  குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலை 8 அடி நீளமுள்ள பெரிய முதலை  தெருவில் நீந்தியபடி வந்தது. இதை பார்த்து மக்கள் பீதி அடைந்தனர். இது பற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாதவ் தேசிய உயிரியல் பூங்கா ஊழியர்கள் வந்து, பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு முதலையை பிடித்தனர். பின்னர், அதை சுங்கயா சாகர் குளத்தில் விட்டனர்.

Related Stories: