காஷ்மீரில் தீவிரவாதிகள்கையெறி குண்டு வீசி தாக்குதல் போலீஸ் பலி

நகர்: காஷ்மீரில் குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் உள்ள கிமோ பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிள், போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தாரிக் கான் என்ற காவலர் உயிரிழந்தார். இதனை காஷ்மீர் மண்டல போலீஸ் அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Related Stories: