கொலை குற்றவாளி சிக்கினார்

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி சந்திரயோகி சமாதி தெருவை சேர்ந்தவர் பிரவீன் (எ) பால் பிரவீன் (28). ஓட்டேரி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது 2 கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிறுவையில் உள்ளன. கடந்த 2019ம் ஆண்டு ஓட்டேரியில் நடந்த கொலை வழக்கில் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

ஜாமீனில் வெளியே வந்த இவர், அதன்பிறகு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால், இவரை பிடிக்க நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன்பேரில், ஓட்டேரி போலீசார் தனிப்படை அமைத்து, தலைமறைவாக இருந்த பிரவீனை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவரை ஓட்டேரி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: