மும்பை: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எல்ஐசியின் பிரீமியம் வருவாய் 20.35 சதவீதம் அதிகரித்து ரூ.98,352 கோடியாக உள்ளது என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: எல்ஐசி நிறுவனம், கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிந்த முதல் காலாண்டில் பிரீமியம் வருவாயாக மொத்தம் ரூ.98,352 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 20.35 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. முந்தைய ஆண்டில் இந்த வருவாய் ரூ.81,721 கோடியாக இருந்தது. வரிக்கு பிந்தைய லாபம் ரூ.682.88 கோடியாக உள்ளது.