சென்னை: நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது தாக்குதலுக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக தலைவர்): நிதியமைச்சரின் கார் மீது செருப்பு வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. எல்லையில் நாட்டைக் காப்பாற்ற போராடி மரணடைந்த ராணுவ வீரருக்கு இறுதி மரியாதை செலுத்தும் இடத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளால் பாஜவினர் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டது அவர்களின் வன்முறை மனப்பான்மையை எடுத்துக்காட்டியுள்ளது. இந்த வன்செயலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.