நொய்டா: நொய்டாவில் ஆட்டோ டிரைவரின் காலரை பிடித்து கன்னத்தில் பளார் என்று அறைந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஆட்டோ ரிக்ஷா ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதையடுத்து காரில் இருந்த பெண் ஒருவர், காரில் இருந்து இறங்கிவந்து ஆட்டோ ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் அவர் ஆட்டோ ஓட்டுரின் சர்ட் காலரை பிடித்து இழுத்து, அவரது கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.