சென்னை: அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அன்றாட செய்திகளின் குரலாக நுழைந்து வரலாற்றின் குரலாக நினைத்து நின்றுவிட்டது சரோஜ் நாராயணசுவாமி குரல் எனவும் மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டுவிட்டது அறிந்து வேதனையடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.