டெல்லியில் வெளிநாட்டு பெண்ணுக்கு குரங்கம்மை

புதுடெல்லி: டெல்லியில் ஆப்பிரிக்காவை சேர்ந்த 22 வயது பெண் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ஆப்பிரிக்காவை சேர்ந்த இந்த பெண் நைஜீரியா சென்று வந்துள்ளார். டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணின் மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியானதில் குரங்கம்மை உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, டெல்லியில் குரங்கம்மை பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: