சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.192 அதிகரித்துள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறுவதும், இறக்குவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 9ம் தேதி தங்கம் விலை, கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,900க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.39,200க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. 10ம் தேதி சவரனுக்கு ரூ.56 குறைந்து ஒரு சவரன் ரூ.39,144, 11ம் தேதி சவரன் ரூ.39080க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராம் ரூ.4,890க்கும், சவரன் ரூ.39,120க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்வை சந்தித்தது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,914க்கும், சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ஒரு சவரன் ரூ.39,312க்கும் விற்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.