தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்.

திருப்பதி: தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்தில் சென்று திருமலை ஏழுமலையானை தரிசிக்க 20 மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 64 அறைகளும் பக்தர்களால் நிரம்பி 3 கி.மீ. தூரத்துக்கு வரிசை அதிகரித்து வருகிறது. ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வாங்கியவர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

Related Stories: