அம்பத்தூர்: கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு வில்லிவாக்கத்தில் நடந்த கூட்டத்தில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில், ‘உடன்பிறப்பே எங்கள் உயிர் மூச்சு’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.