சென்னை: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உண்ணி களைச்செடிகளால் தயாரிக்கப்பட்ட யானைகளை நிறுவி விழிப்புணர்வு நிழ்ச்சியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உள்ள யானைகளின் வாழ்விடங்களில் தமிழ்நாட்டின் வனப்பகுதிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பண்டைய தமிழ் இலக்கியத்தில் உள்ள யானைகள் பற்றிய குறிப்புகள் யானைகள், தமிழர் வாழ்வியலில் யானைகள் ஒரு அங்கமாக விளங்குகின்றன என்பதை தெரிவிக்கின்றன. யானைகள் பாதுகாப்பிவீன உறுதி செய்ய யானைகளின் வாழ்விட பாதுகாப்பிற்காக இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் 4 யானைகள் காப்பகங்கள் உள்ளன. அதாவது, நீலகிரி யானைகள் காப்பகம், நிலம்பூர் யானைகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர் யானைகள் காப்பகம், ஆனைமலை யானைகள் காப்பகம் ஆகும். 2017ம் ஆண்டு நடந்த யானைகள் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் சுமார் 2,700 யானைகள் உள்ளன.