சென்னை: செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 7 செல்போன்கள், 4 டேப்லட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னைபுதுப்பேட்டை லப்பை தெருவில் வசித்து வரும் அகமது இக்பால் (37), அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 3ம் தேதி இரவு தனது செல்போன் கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் கடை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கடையில் வைத்திருந்த 7 செல்போன்கள் மற்றும் 4 டேப்லட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து அகமது இக்பால், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.