சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அன்று ஒருநாள் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1989 விதி 23 மற்றும் உரிம நிபந்தனைகளின் படி அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் கீழ்கண்ட நாளில் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பினை தொடர்ந்து. வரும் 15.8.2022 (திங்கள் கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (பார்) மற்றும் ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.

Related Stories: