மதுராந்தகம்: பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோயிலில் ஆடி 4வது வெள்ளியையொட்டி தீமிதி திருவிழா கோலாகலமாக நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே பெரும்பேர்கண்டிகையில் கிராம தேவதையான எல்லையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் நான்காவது வார வெள்ளி அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று காலை எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.