ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி 43வது வார்டு வசந்தம் நகர் பகுதியில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வசந்தம் நகர் பிரதான சாலை சாலையோரம் இக்கால்வாய் அமைக்க ரூ.6 கோடி ஆவடி மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கியது. வடிகால்வாய் வரை ஒரு புறமும் 1000 மீட்டர் நீளம், 4.5 அடி உயரம், 4 அடி அகலம் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு பருவம் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக ஸ்ரீராம் நகர் இருந்தன. இதை முதல்வர் நேரில் ஆய்வு செய்தார். உடனடியாக தீர்வுகாண ஆவடி மாநகராட்சி 47வது வார்டு ஸ்ரீராம் நகர் சாலையோரம் இக்கால்வாய் அமைக்க ரூ.4.5 கோடி ஆவடி மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கியது. வடிகால்வாய் வரை ஒரு புறமும் 1500 மீட்டர் நீளம், 5.5 அடி உயரம், 5 அடி அகலம் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.