ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் மாவட்ட போலீஸ் எஸ்பி திடீர் ஆய்வு நடத்தினார். ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் தற்போது இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ உள்பட 27 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஊத்துக்கோட்டை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் போலீஸ் பற்றாக்குறையாக இருக்கலாம் என பொதுமக்கள் கருதினர். இந்நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி செபாஸ் கல்யாண் திடீரென ஊத்துக்கோட்டை ஆந்திர எல்லையில் உள்ள போலீஸ் சோதனை சாவடியை ஆய்வு செய்தார்.