பூந்தமல்லி: வளசரவாக்கம், பழனியப்பா நகரை சேர்ந்தவர், ராமகிருஷ்ண ராவ்(53), இவர் சினிமா துறையில் கேமரா மேனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் அரிதா ராஜேஸ்வரி(25), பட்டப்படிப்பு முடித்த இவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு மாணவர்களுக்கு டியூஷன் எடுத்த வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் அரிதா ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட அரிதா ராஜேஸ்வரி செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: அரிதா ராஜேஸ்வரிக்கு சமூக வலை தளம் வாயிலாக மதுமோகன்(35), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.