பிரிஸ்டோல்: இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தை சேர்ந்த புவியல் பேராசிரியர் ஜோனாத்தன் பேம்பர் என்பவர் ஆர்க்டிக் பகுதி குறித்து ஆராய்ச்சி நடத்தி உள்ளார். இந்த புதிய ஆய்வில் கடந்த 43 ஆண்டுகளில் உலகின் மற்ற பகுதிகளை விட ஆர்க்டிக் பகுதி, 4 மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது. கடந்த 1980ம் ஆண்டு இருந்ததை விட, ஆர்க்டிக்கில் சராசரியாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாகி இருக்கிறது.