உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காவனூர்புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (55). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் உத்திரமேரூரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் காவனூர்புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். காவனூர்புதுச்சேரி கூட்ரோடு அருகே வந்தபோது எண்டத்தூர் பகுதியிலிருந்து 3 பேருடன் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக காந்தி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.