புதுடெல்லி: ஹஜ் கமிட்டி அமைத்தது தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘ஹஜ் கமிட்டி சட்டத்தின்படி, ஹஜ் கமிட்டி அமைப்பதிலும், அதற்கான நிதியை பயன்படுத்துவதிலும் சில மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் முறையாக செயல்படவில்லை. இது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும்’ என ஹஜ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் ஹபிஸ் நவுசத் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.