வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் களியனுர் ஊராட்சியை சேர்ந்தவர் ருத்ரகோட்டி. இவர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நித்திய ராணி (35). இவர்களுக்கு, இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் வீட்டின் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது, காஞ்சிபுரத்திலிருந்து களியனுர் நோக்கி பால் ஏற்றி சென்ற மினிவேன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விஜய ராணி மீது மோதியது. பின்னர், மாடு, நடந்து சென்ற சிவா மற்றும் மாலா ஆகியோர்கள் மீது மோதியது.