75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், கடைகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும்: வணிகர்களுக்கு விக்கிரமராஜா வேண்டுகோள்

சென்னை: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், கடைகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று வணிகர்களுக்கு விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: 75வது சுதந்திர தின விழாவை தேசிய அளவில் சிறப்பாக கொண்டாட ஒன்றிய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று, அனைத்து வணிகர்களும் தங்களது வணிக கடைகளிலும், இல்லங்களிலும் தேசியக் கொடியை வரும் ஆகஸ்ட் 13ம் தேதி (இன்று), 14, 15 ஆகிய மூன்று நாட்களிலும் ஏற்றி, வணிகர்களின் தேசப்பற்றையும் ஒற்றுமையையும், ஒருங்கிணைப்பையும், தேசிய வரிவருவாய் ஈட்டுதலிலும், தங்களது முழுமையான பங்களிப்பை தவறாமல் நிறைவேற்றிட வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தமி மாநிலம் முழுவதும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வினை முதல் கட்டமாக சென்னை, திருவல்லிக்கேணியில் ஆகஸ்ட் 13ம் தேதி (இன்று) அனைத்து வணிக சொந்தங்களோடு தொடங்கி வைக்கிறேன்.

Related Stories: