டெல்லி: பதிவுத்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஓப்புதல் வழங்கியுள்ளார். மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. நில அபகரிப்பாளர்களிடம் இருந்து மீட்டு சொத்துகளை உரியவர்களுக்கு தரும் திருத்தம் கொண்டு வந்த முதலமைச்சருக்கு அமைச்சர் மூர்த்தி நன்றி கூறியுள்ளார்.