மதுரை: சாத்தான்குளம், தந்தை, மகன் கொலை வழக்கில் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது. மதுரை மாவட்டம் முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தில் ஆஜரான சிபிஐ தரப்பு வழக்கறிஞர் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தார். ஜெயராஜை சாத்தான்குளம் போலீஸ் அழைத்துச் சென்ற வீடியோ பதிவையும் சிபிஐ தாக்கல் செய்துள்ளது