மதுரை: நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த மே 14ம் தேதி பாறை சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் குவாரிகள், கிரஸர்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. மேலும் விதிகளை மீறி செயல்பட்டதாக குவாரிகளுக்கு 300 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை, அபராதத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நெல்லை குவாரிகள் சங்கம், முறையாக அனுமதி பெற்று செயல்பட்ட குவாரிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினர்.