நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பெர்க்மான்ஸ் (65). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் பெட்ரோல் பங்க் வைப்பதற்கு இடம் தேவைப்படுவதாக சில புரோக்கர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது புரோக்கர்களான மேலப்பாளையத்தை சேர்ந்த பரித் புகாரி (52), தாழையூத்தை சேர்ந்த துரை (48) ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. இவர்கள் நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை, வடக்கு புறவழிச்சாலையோரம் உள்ளிட்ட பகுதியை ஒட்டி அமைந்துள்ள சில இடங்களை தங்களுக்கு சொந்தமானது என தெரிவித்து அந்த இடத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து பெர்க்மான்சிடம் காட்டினர்.