ஐதராபாத்: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனின் தாயார் விஜயம்மா பயணம் செய்த காரின் 2 சக்கரங்களும் ஒரே நேரத்தில் வெடித்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் எந்தவித காயமுமின்றி அவர் உயிர் தப்பினார். விஜயம்மா என்று ஆந்திர மக்களால் அழைக்கப்பட கூடிய ஜெகன் மோகனின் தாயார் விஜயலட்சுமி, நேற்று தனது கணவரின் நண்பரான ஐபாபு ரெட்டியின் குடும்பத்தினரை பார்க்க காரில் கர்னூல் சென்றிருக்கிறார். பின்னர் அங்கிருந்து ஐதராபாத்துக்கு திரும்பி செல்லும் போது புத்தி பெட்ரோல் நிலையம் அருகே திடீரென அவரது காரின் 2 டயர்களும் வெடித்தன.