பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 1008 பால் குடம் எடுத்து பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். பொன்னேரி வேண்பாக்கம் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் நேற்று ஆடி மாதம் திருவிழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர். நேற்று ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 13ஆம் ஆண்டு பால் குட திருவிழா நடைபெற்றது. வரசக்தி விநாயகர் ஆலயத்திலிருந்து ஆலய திருப்பணி குழுவினர், பக்தர்கள் தலையில் 1008 பால் குடங்களை சுமந்து பொன்னியம்மன் ஆலயத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.