ஐநா: இந்தியாவில் கிரிப்டோ கரன்சி பயன்பாடு அதிகரித்து வருகிறது என்றும் 7 சதவீத இந்தியர்கள் டிஜிட்டல் கரன்சி வைத்துள்ளனர் என்றும் ஐநா தெரிவித்துள்ளது. கிரிப்டோ கரன்சி என்பது அரசால் ஒழுங்குபடுத்தப்படாத டிஜிட்டல் பணமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் ஏராளமானோர் இதில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் மூலம், வர்த்தகமும் செய்யப்படுகிறது. இதை அரசோ, ஒழுங்குமுறை அதிகார அமைப்போ வழங்குவதில்லை. கிரிப்டோ கரன்சி தொடர்பான கொள்கை முடிவுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பான (யுன்டாக்ட்) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் சர்வதேச அளவில் கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் கரன்சிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.