சென்னை: 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.2.8 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில்,ஊழலை ஒழிப்போம் என்று புறப்பட்டவர்கள் எங்கே என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.2.8 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.