5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இழப்பீடு; ஊழலை ஒழிப்போம் என புறப்பட்டவர்கள் எங்கே? திருமாவளவன் கேள்வி

சென்னை: 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.2.8 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில்,ஊழலை ஒழிப்போம் என்று புறப்பட்டவர்கள் எங்கே என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.2.8 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

ஆனால் இதை பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. இப்போது அண்ணா ஹசாரே போன்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் ஊழலை ஒழிப்போம் என்று புறப்பட்ட ஜனநாயக சக்திகள் தற்போது வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன் என்று புரியவில்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Related Stories: