சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் டிவிட்டரில் பாராட்டு தெரிவித்து இருந்தார். அதில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும், அரசும் மிக சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்குபெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுகள் என தெரிவித்து இருந்தார்.