சென்னை: பொதுமக்களிடம் மோசடி செய்த நிதி நிறுவனங்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை, வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 3 நிதி நிறுவனங்களும் மோசடி செய்த தொகையில் 10% கூட இன்னும் மீட்கப்படவில்லை.