மோசடி செய்த நிதி நிறுவனங்களின் சொத்துகளை முடக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பொதுமக்களிடம் மோசடி செய்த நிதி நிறுவனங்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை, வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 3 நிதி நிறுவனங்களும் மோசடி செய்த தொகையில் 10% கூட இன்னும் மீட்கப்படவில்லை.

 அவற்றின் சொத்துகளும் முடக்கப்படவில்லை. மோசடி நிதி நிறுவனங்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட வேண்டும். தமிழ்நாட்டிலும், மற்ற மாநிலங்களிலும் மோசடி நிறுவனங்கள் குவித்துள்ள அனைத்து சொத்துகளும் முடக்கப்பட வேண்டும்.

Related Stories: