சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக சுற்றுலாத்துறை சார்பில் நாளை முதல் 15ம் தேதி வரை மூன்று நாட்கள் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெறும் என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, சுற்றுலாத்துறை வெளியிட்ட அறிக்கை: சுற்றுலாத்துறை மூலம் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வரும் 13ம் தேதி (நாளை) சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைக்கின்றனர்.