பெய்ஜிங்: கொரோனா பரவலுக்கு இடையே சீனாவில் புதிய வைரஸ் தொற்று பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளை கடந்தும் கொரோனா பரவல் ஓயாத நிலையில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை விஸ்பரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் சீனாவில் புதிய வகை வைரஸ் தொற்று பரவி வருவதை அந்நாட்டு சுகாதாரத்துறை உறுதி செய்தது. Lay-V எனப்படும் லங்யா ஹெனிபா வைரஸ் சீனாவில் பரவி வருகிறது. ஷாங்டாங், ஹெனான் ஆகிய தெற்கு மாகாணங்களில் 35 பேர் லங்யா ஹெனிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.