ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. ரஜோரியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் ராணுவ முகாமில் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். முகாமில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.