சிவகாசி: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு இதுவரையிலும் தோண்டப்பட்ட குழிகளில் பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண் விளையாட்டு பொருட்கள், யானை தந்தத்தால் ஆன அணிகலன், டெரகோட்டாவால் ஆன குவளை என பல்வேறு வரலாற்று சான்றுகள் கிடைத்தன.