சேலம்: சேலத்தில் துப்பாக்கி தயாரித்த வழக்கு, ஓமலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த இன்ஜினியர் சஞ்சய் பிரகாஷ் (25), எருமாப்பாளையத்தை சேர்ந்த பிசிஏ பட்டதாரி நவீன்சக்கரவர்த்தி(25) ஆகியோர் வாடகைக்கு வீடு எடுத்து யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக அழகாபுரத்தை சேர்ந்த கபிலன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஓமலூர் போலீசில் இருந்த இந்த வழக்கு, சேலம் கியூ பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.