நாகப்பட்டினம்: தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கீச்சாங்குப்பத்தை சேர்ந்த 9 மீனவர்கள், கடந்த 6ம் தேதி இரவு விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று காலை 130 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.