நாகை மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

நாகப்பட்டினம்: தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கீச்சாங்குப்பத்தை சேர்ந்த 9 மீனவர்கள், கடந்த 6ம் தேதி இரவு விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று காலை 130 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை திடீர்குப்பம் பகுதியை சேர்ந்த 9 பேரை கைது செய்ததோடு, விசைப்படகு மற்றும் மீன்பிடி வலைகள், உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: