சென்னை: ஆதார் எண்ணை பி.எம்.கிசான் வலைதளத்தில் புதுப்பிக்க வேண்டும் என உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ‘பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூபாய் 6,000 மூன்று தவணைகளில், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்படுகிறது.