சென்னை: சசிகலா, டிடிவி.தினகரன், ஓ.பி.எஸ் மூவரும் வேண்டுமானால் இணையலாம். ஆனால், ஒருபோதும் அதிமுக கட்சியில் அவர்கள் இணைய முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் உள்ள பெரியபாளையத்தமன் கோயிலின் 41வது ஆண்டு ஆடித் திருவிழா நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.