ஜிப்மர் செவிலியர்கள் வேலைவாய்ப்பு; தமிழகம்-புதுச்சேரி புறக்கணிப்பு: வைகோ கடும் கண்டனம்

சென்னை: ஜிப்மர் செவிலியர்கள் வேலைவாய்ப்பில் தமிழகம்-புதுச்சேரி புறக்கணிப்புக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், செவிலியர் காலிப் பணியிடங்களுக்காக 2022 ஜூலை 13ம் தேதியிட்ட வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பின்படி 139 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்வதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது.

ஆனால் 28.7.2022ம் தேதிக்கு பிறகு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேர்வு மையங்கள் திட்டமிட்டு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் செவிலியர்கள் தேர்வு எழுத இயலாதபடி ஒன்றிய அரசு திட்டமிட்டு புறக்கணித்துள்ளது. எனவே ஒன்றிய அரசால் முடக்கப்பட்டுள்ள இணையதள சேவையை குறிப்பிட்ட தேதி வரை செவிலியர்கள் விண்ணப்பிக்கும் வகையில் உடனடியாக இணைக்கும்படி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: