மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்த வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. போலீசாருக்கான மனநல புத்தாக்க பயிற்சிகள் முறையாக நடப்பதாக அரசு கூறியதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. கோப மேலாண்மை உள்ளிட்ட 12 தலைப்புகளின் கீழ் போலீசாருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது தமிழக அரசு தெரிவித்துள்ளது.