கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஹேண்ட் பிரேக் போடாமல் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி தானாக முன்னோக்கி சென்றதில் எதிரே இருந்த 4 வயது சிறுவன் மீது மோதியதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (36) இவரது மகன் ரித்விக் வயது (4). நீலிபாளையம் நால்ரோடு பிரிவில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழா நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு கோயிலை சுத்தப்படுத்துவதற்காக தனியார் தண்ணீர் லாரி வரவழைக்கப்பட்டது. கோயிலை வந்தடைந்த லாரியின் ஓட்டுநர் லாரி முன்புறம் நகராமல் இருக்க ஹேண்ட் பிரேக் போடாமல் நிறுத்தியுள்ளார். அப்போது ரோடு ஓரத்தில் சிறுவர், சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தனர்.