திருமலை: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் நடித்த பிரபல நடிகை ஜெயசுதா பாஜவில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் ஜெயசுதா. இவர் தெலுங்கில் மட்டும் 200க்கும் மேற்பட்ட படங்களில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்து ஐதராபாத்தில் குடியேறினார்.
கடந்த 2001ல் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஜெயசுதா, ஆந்திராவில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரசில் இணைந்தார். ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வராக இருந்தபோது ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய நிலையில், 2009ம் ஆண்டு தேர்தலில் ஜெயசுதா செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் அகால மரணத்திற்கு பிறகு கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார்.