திருச்சி: திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு 9 மணியளவில் ஒரு மர்ம நபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், நான் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளேன்’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். உடனே கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வெடிகுண்டு கண்டறியும் பிரிவு போலீசார், மோப்ப நாய் டெய்சியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.