சென்னை: ஆளுநர் மாளிகையில் ரஜினியிடம் ஆளுநர் அரசியல் பேசியதில் என்ன தவறு? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 75வது சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண கொடி ஏந்தி வங்கக்கடலில் பாஜகவினர் படகு பேரணி நடத்தினர். சென்னை நீலாங்கரை கடற்கரையில் படகு பேரணியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். 250 படகுகள் தேசியக்கொடியுடன் பாஜகவினர் பேரணியில் பங்கேற்றுள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஆளுநர் மாளிகையில் ரஜினியிடம் ஆளுநர் அரசியல் பேசியதில் என்ன தவறு? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை; மாநிலத்தில், நாட்டில், சர்வதேச, நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை பேசுவதும் அரசியல் தான்.