ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் தேநீர் கடையில் சமையல் சிலிண்டர் வெடித்ததில் 5 பேர் படுகாயமடைந்தனர். வாணாபாடி கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வீட்டின் ஒருபகுதியில் தேநீர் கடை ஒன்று வைத்துள்ளார். கடையில் பால் காய்ச்சுவதற்கென தனியறை ஒன்றில் கேஸ் அடுப்பும் வைத்துள்ளார். இன்று அதிகாலை வழக்கம்போல கடையை திறந்த செல்வராஜ், தேநீர் போட்டு வந்துள்ளார். இந்நிலையில் அருகே உள்ள பால்காய்ச்சும் அறையை திறந்து மின்விளக்கை ஒளிரச்செய்ய சுவிட்ச் ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக உள்ளே இருந்த சமையல் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.