நீலகிரி: உதகையில் தொடர் மழையால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாகாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மசினகுடி- கூடலூர் இடையே 2வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பைக்காரா மற்றும் கிளன்மார்கன் அணைகளில் இருந்து மாகாற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மசினகுடி- கூடலூர் நெடுஞ்சாலையில் உள்ள தெப்பக்காடு தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.